Wednesday, July 11, 2007

பாலஸ்தீன்: சகோதர யுத்தம் முடிவுக்கு வந்தது

பாலஸ்தீன்: சகோதர யுத்தம் முடிவுக்கு வந்ததுஅபூசாலிஹ்
குண்டுகளின் மழையில் தீக்குளித்த தியாக பூமியான பாலஸ்தீனத்தின் சமீபத்திய சகோதர யுத்தம் முடிவுக்கு வந்தது.
1948ல் வஞ்சகமாய் வளைகுடாப் பகுதியில், மேற்கு சக்திகளால் வ­ந்து திணிக்கப்பட்ட இஸ்ரேல் என்ற செயற்கை அரசு பாலஸ்தீனப் பகுதிகளை அபகரித்து மண்ணின் மைந்தர்களான பாலஸ்தீனர்களை நாடற்ற அகதிகளாக் கியது. வல்லரசுகளின் ஆயுத உதவியுடன் பாலஸ்தீனர்களின் விடுதலைப் போராட்டத்தை இரக்க மற்று நசுக்கியது இஸ்ரேல்.
யாசர் அராபாத் எனும் தியாகத் தலைவன் பாலஸ்தீன மக்களின் உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்தார். பாலஸ்தீன விடுதலை முன்னணி (பி.எல்.ஓ) உருவானது. விடுதலைப் போராட்டம் வலுவடைந்தது. அதே வேளையில் இஸ்ரே லும் வ­மைமிக்க சக்தியாக மாறியது.
நீண்ட நெடிய போராட்ட வரலாற்றில் தனது மக்களுக்காக சமாதான உடன் பாட்டுக்கும் உடன்பட்டார் அராபத். 1993ல் இஸ்ரே­ய சக்திகளுடன் உடன்பாடு செய்து கொண்டார். சமாதான பேச்சுவார்த்தையின் •மூலம் இஸ்ரே­ன் ராஜ வியூகத்தை உடைத்தார். மிதவாதிகளிடம் செல்வாக்கு ஏறுமுகமாய் சென்றாலும் உணர்ச்சிக் கொந்தளிப்புடைய மக்களிடம் தனது பெருமையை இழக்க வேண்டிய தாயிற்று.
காலமெல்லாம் களத்தில் நின்றார். ராஜதந்திர ரீதியில் மேற்குலக சூழ்ச்சிகளை சுட்டெறித்தவரின் புகழ் ஒளி கொஞ்சம் மங்கத்தான் செய்தது. இருப்பினும் தனது மக்களின் உரிமை களை விட்டுக் கொடுக்காமல் விழுப்புண்களுடன் விழாமல் போராடினார். தாளத்துக்கு தலையாட்டாத ஆத்திரத்தில் இஸ்ரேல் அரசு அரபாத் தின் அலுவலகத்தின் மீதே குண்டு வீசியது. மிருகத்தனமாக மின் இணைப்பை கூட துண்டித்தது, தனது மக்களின் துன்பம் கண்டு மெழுகாய் உருகிய அந்த மனிதன் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மக்கள் பணி ஆற்றினார். வஞ்சகத்தையே வாழ்க்கை பாதையாக கொண்டிருந்த யூதர்கள் மெல்ல மெல்ல கொல்லும் நஞ்சினை ஊட்டி படுகொலை செய்தனர். அராபாத் மறைந்தார். ஆனால் ஃபதாஹ் மறையவில்லை. ஏதோ தானும் இருக்கிறேன் என்பதைப் போல அதன் செயல் பாடுகள் மந்த கதியில் இயங்கியது.
ஃபதாஹ் இயக்கத்தின் கூர்மை குறைந்த செயல்பாடுகளால் ஹமஸ் பாலஸ்தீன அரங்கில் உதித்தது. அராபத்தின் காலத்திலே இளைஞர்களின் இதயங்களை கவர்ந்த இயக்கமாக ஹமஸ் உருவெடுத்தது. உலகெங்கும் வாழும் விடுதலைப் போராளிகளின் ஞானத் தந்தையான ஷேக் அஹ்மது யாசின் இளைஞர்களை வார்த்தெடுத்தார். ஹமஸின் எழுச்சி, யூத ஆக்கிரமிப்பு சக்திகளுக்கு அச்சத்தையும் ஆத்திரத்தையும் அதிகப்படுத்தியது. வஞ்சகமாய் குண்டு வீசிக் கொன்றது. தொடர்ந்து வந்த ஹமாஸ் தலைவர் அப்துல் அஜீஸ் ரந்திஸியையும் படுகொலை புரிந்தது. ஹமஸ் தனது உரிமைப் போராட்டத்தினை சளைக்காமல் முன்னெடுத்தது.மேற்குலகும் இஸ்ரேலும், இந்த சக்திகளின் அடியொற்றி செய்திகளை வெளியிடும் ஊடகங்களும் ஹமஸை பயங்கரவாத இயக்கம் என தொடர்ந்து கூறிவந்த நிலையில், நெஞ்சுருத்துடன் ஹமஸ் ஜனநாயகப் பாதைக்குள் நுழைந்தது. அதன் அரசியல் ராஜதந்திரியுமான ஹா­த் மிஷால் இஸ்ரே­ன் சதிச் செயலை முறியடிக்கவும் தன்னை தற்காத்துக் கொள்ளவும், தற்போது சிரியாவில் வாழ்ந்து வருகிறார்.
ஹா­த் மிஷாலை கொலை செய்ய இஸ்ரேல் பலமுறை முயற்சிகளை மேற் கொண்டது. இறையருளால் அவர் இன்று வரை உயிர் பிழைத்து தனது மண்ணுக் காகவும், மக்களுக்காகவும் போராடி வருகிறார். சரி ஜனநாயகப் பாதைக்குத் திரும்பிய ஹமஸ் நாடாளுமன்றத் தேர்த­ல் குதித்தது, பெரிவாரியான வெற்றியும் பெற்றது. இஸ்மாயில் ஹனியா தலைமையில் அமைச்சரவை அமைத்தது. ஓர் நிழல் இயக்கம் ஜனநாயகப் பாதைக்கு வந்ததை வரவேற்க மனமின்றி அமெரிக்கா வும், இஸ்ரேலும், மேற்குலகும் ஹமஸிற்கு வாக்களித்த மக்களுக்கு பொருளாதார உதவிகளை முடக்கி பட்டினியில் தள்ளியது. வறுமையின் பிடியில் தள்ளப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு ஏனென்று கேட்க யாருமற்ற நிலையில் ஈரான் நிதியுதவி புரிந்தது. அது எப்படியோ பாலஸ்தீன அரசுக்கு போய்ச் சேர்ந்து விட்டது எனினும், பிற நிதி உதவிகள் யூத சக்திகளால் முடக்கப்பட்டன. அரசு ஊழியர் களுக்கு கூட ஊதியம் வழங்க முடியாமல் புதிதாகப் பதவியேற்ற ஹமஸ் அரசு தவித்தது.
ஃபதாஹ் இயக்கத்துக்கும், ஹமஸுக்கும் மோதல் வேறு ஏற்பட்டது. கடந்த டிசம்பர் முதல் அது பெரும் மோதலாக மாறியது. அரபுலகம் அதிர்ச்சியில் ஆழ்ந்தது. நடுநிலை யாளர்கள் வேதனை யில் ஆழ்ந்தனர். இதற்கிடையில் ஃபதாஹ், ஹமஸ் மோத­ல் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ப­யாக உலக முஸ்­ம்களின் மன வேதனை அதிகமாகியது. ஏகாதிபத்திய சக்திகள் மகிழ்ச்சியில் கூத்தாடினர்.
அனைத்துக்கும் முடிவுரை எழுதும் முகமாக பாலஸ்தீனத்தில் சகோதர யுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. சவூதி அரேபிய மன்னர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸ் அவர்களின் சீரிய முயற்சியால் பேச்சுவார்த்தை தொடங் கியது. அல்ஃபதாஹ் இயக்கத்தின் சார்பாக அதிபர் மஹ்மூத் அப்பாஸும், ஹமஸ் இயக்கத்தின் சார்பாக அதன் அரசியல் ராஜதந்திரி ஹா­த் மிஷால் மற்றும் பிரதமர் இஸ்மாயில் ஹனியாவும் பங்கேற்றனர்.
கஃபத்துல்லாஹ்விற்கு அருகிலேயே அல்சஃபா அரண்மனையில் இந்தப் பேச்சு வார்த்தை தொடங்கியது. அடைக்கப்பட்ட கதவுகளின் உள்ளே சகோதரத்துவ உணர்வு உடைந்து பீறிட்டது. மக்கள் நலன் நாடும் புரிந்துணர்வுடன் கூடிய ஒரு ஒப்பந்தத்தை எட்டாமல் இந்த புனித நகரை விட்டு நாங்கள் செல்லமாட்டோம் என ஹா­த் மிஷால், இஸ்மாயில் ஹனியா உணர்ச்சிப் பெருக்குடன் கூறினர்.
எங்கள் புதல்வர்களும், புதல்விகளும் கண்ணியமான வாழ்க்கை வாழ்வதற்காக நாங்கள் பாடுபடுகிறோம் என அதிபர் மஹ்மூத் அப்பாஸ் தெரிவித்தார்.
தொலைக்காட்சி வாயிலாக ஹா­த் மிஷால் மற்றும் மஹ்மூத் அப்பாஸ் தெரிவித்த சமாதான செய்தி பாலஸ் தீனத்தில் பரவி சந்தோஷ அலைகளை எழுப்பியது.
அல் அக்ஸா மஸ்ஜிதில் அகழ் வாராய்ச்சி என்ற பெயரில் புனிதப் பள்ளிவாசலுக்கு இஸ்ரேல் சேதம் விளைவிக்க முயல்வதை அதிபர் மஹ்மூத் அப்பாஸ் வேதனையுடன் தெரிவித்தார்.
நாம், எதிர் காலத்தில் இறையான்மை பெற்ற நாட்டில் வாழ்வதற்கு வேண்டிய ஆயத்தங்களை முன்னெடுக்க வேண் டும். அதற்கான உத்வேகம் இப்போது புறப்பட்டு விட்டது. நாம் ஒன்றுபட வேண்டிய வேளையும் வந்து விட்டது. பிரச்சினைகளுக்கு முடிவு காண வேண் டிய தருணம் இது. எங்களுக்கு பெரிய ஆசைகள் இல்லை. நாங்கள் எங்கள் உரிமைகளை மட்டுமே கேட்டிருக் கிறோம். இதை சர்வதேச சமூகம் மதிக்க வேண்டும். நாம் புதிய அத்தியாயம் படைக்க வேண்டும். போனவை போகட்டும். நமக்கு ஒரேயொரு எதிரி மட்டுமே. நாம் எதிர்க்கும் காரணம் ஒன்று மட்டுமே. நாம் நம் எதிரியை ஒன்றாகவே எதிர்கொள்வோம் என்றும் ஹா­த் மிஷால் தெரிவித்தார்.
பாலஸ்தீனப் பிரதமர் இஸ்மாயில் ஹனியா நபிகள் நாயகத்தின் இறுதி உரையை மேற்கோள் காட்டி உரையாற்றினார். 'ஒவ்வொரு முஸ்­மும் மற்றொரு முஸ்­முக்கு சகோதரர் ஆவார். உங்களுக்குள் அநீதி புரிந்து கொள்ளாதீர்கள். ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் ஒரு நாள் நீங்கள் இறைவனை சந்திக்க வேண்டும். உங்கள் செயல்கள் அனைத்துக்கும் நீங்கள் பதில் சொல்­யே தீர வேண்டும் என்றார். சமாதான முயற்சிகள் குறித்த தகவல்கள் அரபுலகில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது மூன்று நாள் பேச்சுவார்த்தைக்குபின் ஒற்றுமை உடன்பாடு எட்டப் பட்டது.
'மக்கா உடன்பாடு' என்று பெயரிடப்பட்ட இந்த ஒப்பந்தம் ஹமஸின் ஹா­த் மிஷாலுக்கும் ஃபதாஹ் இயக்கத்தின் சார்பில் அதிபர் மஹ்மூத் அப்பாஸுக்கும் இடையில் கையெழுத்தானது.
எமது மக்கள் வீழ இனி அனுமதிக்க மாட்டோம் என இருவரும் சூளுரைத்தனர். பாலஸ்தீனத்தின் ஒற்றுமைக்கு குலைவான, கறுப்பு நிகழ்வுகள் மீண்டும் நிகழாமல் இருக்க இந்த புனித நகரத்தின் கஃபதுல்லாஹ்வை சாட்சியாய் வைத்து உறுதி ஏற்போம் என உணர்ச்சிப் பெருக்குடன் குறிப்பிட்டனர். நாம் பாலஸ்தீனர் களின் ரத்தத்தையும் பெருமிதத்தையும் பாதுகாக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டனர்.
இந்த வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பிலும், உடன்பாட்டிலும் முக்கிய பங்கு வகித்த சவூதி மன்னர் அப்துல்லாஹ்வை பாலஸ்தீன தலைவர்கள் மனமார வாழ்த்தினர். மன்னர் தனது புதல்வர்களிடம் உரையாடுவதுபோல் எங்களிடம் கனிவாக உரை யாற்றினார் என இஸ்மாயில் ஹனியா கூறினார். இறைவன் சவூதி அரேபியாவை யும் அதன் அரசையும் பாதுகாத்து சிறப்பிக்க வேண்டும் என்றும் இறைஞ்சுவ தாகக் குறிப்பிட்டார்.
தங்கள் மகிழ்ச்சியை மன்னர் அப்துல்லாஹ்வுக்கும், வாழ்த்துக்களை பாலஸ்தீன தலைவர் களுக்கும் தெரிவிக்க ஆசைப்படுவதாக பாலஸ்தீன மக்கள் மகிழ்ச்சி யுடன் குறிப்பிட்டனர்.
நாம் நமது மக்களுக்கு சேவை புரிவதற்காகவே இச்சாதனையை எட்டியுள்ளதாகக் குறிப்பிட்ட பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் உடனடி யாக ஒருங்கிணைந்த அமைச்சரவையை அமைக்குமாறு பிரதமர் இஸ்மாயில் ஹனியா வைக் கேட்டுக் கொண்டார்.
இவ்வொப்பந்தத்தின்படி இஸ்மாயில் ஹனியா பிரதமராகத் தொடர்வார். ஃபதாஹ் இயக்கத்தின் அஜ்ஜாம் அல் அஹ்மத் துணைப் பிரதமராகிறார். ஹமஸ் இயக்கத் தின் சார்பில் 9 அமைச்சர்கள் இடம்பெறுவர். ஃபதாஹ் சார்பில் ஆறுபேருக்கும் பிற அமைப்புகளின் சார்பில் நான்கு பேருக்கும் மேலும் ஐந்து அமைச்சர் பதவி கள் சுயேச்சை உறுப்பினர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
வெளியுறவுத்துறை மற்றும் உள்துறை உள்ளிட்ட முக்கிய துறைகள் சுயேச்சை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டது. உள்துறையை யார் பெறுவது என்பதில் ஹமஸுக்கும் ஃபதாஹுக்கும் கடும் மோதல் ஏற்பட்டது. உள்நாட்டுப் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட உள்துறையைப் பெறுவதில் ஏற்பட்ட கடும் போட்டியால் சுயேட்சை உறுப்பினருக்கு உள்துறை அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டது.
ஹமஸால் பரிந்துரை செய்யும் சுயேட்சை உறுப்பினர் ஒருவரை உள்துறை அமைச்சராக அதிபர் மஹ்மூத் அப்பாஸ் தேர்வு செய்வார்.
நிதித்துறை அமைச்சர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் பதவிகளுக்கான பெயர்களை ஹமஸ், ஃபதாஹ் இரு அமைப்பினரின் ஒப்புதலைப் பெற்று அறிவிக்கப்பட்டன. முன்னாள் கலாச்சாரத்துறை அமைச்சர் ஜியாத் அழ அம்ரு வெளியுறவுத்துறை அமைச்சராக அறிவிக்கப்ட்டிருக்கிறார். இவர் ஜார்ஜ் டவுண் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர். ஃபையாத் நிதித்துறை அமைச்ச ராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2002 ஆம் ஆண்டு ஃபதாஹ் அமைத்த இடைக்கால அமைச்சரவையில் அங்கம் வகித்தவர். சீர்திருத்தவாதியாக மதிக்கப் படுபவர். டெக்ஸாஸ் பல்கலைக் கழகத்தில் பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்றவராவார்.
இரு தரப்பினரும் நான்கு முக்கிய அம்சங்களை வ­யுறுத்தினர்.
1. குழு மோதல்களை முடிவுக்குப் கொண்டு வருதல்2. ஹமஸ் ஃபதாஹ் இரு இயக்கத்தவரும் ஒன்று பட்டு தேசத்திற்காக சேவை புரிதல்3. அனைவரும் இணைந்து பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை மீண்டும் கட்ட மைத்தல் (இது மேற்குலக சக்திகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் அதிரடி அறிவிப்பல்லவா?)
4. ஒன்றுபட்ட தேசிய அரசு மற்றும் ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படையை அமைப்பது.
லி என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இந்த உடன்பாடு வெற்றிகரமாக எட்டப்பட முக்கிய காரணமாக விளங்கிய சவூதி மன்னர் பாலஸ்தீன மக்களின் போற்றுதலுக்கு உரியவரானார். அனைத்து முஸ்­ம் சமுதாயத்தினரின் பிரதிநிதியாகவும் சவூதி மன்னர் விளங்குவதாக பெருமிதத் துடன் பாலஸ்தீன மக்கள் குறிப்பிடுகின்றனர்.
வேற்றுமை மறைந்து ஒற்றுமை நிலவினால் வெற்றி கைகூடும் நாள் தொலைவில் இல்லை அல்லவா?

இப்போது வீசுடா குண்டை! வீரச்சாவுக்குத் துணிந்த மாவீரர்கள்

இப்போது வீசுடா குண்டை!
வீரச்சாவுக்குத் துணிந்த மாவீரர்கள்
அபூசாலிஹ்

ஈட்டி முனையில் நிறுத்தினாலும் ஈமானை இழக்காத சமூகம், உயிரே போனாலும் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம் என ஆர்த்தெழுந்த வீரமிக்க நிகழ்வு நவம்பர் 18 அன்று வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது.
நவம்பர் 18 அன்று பாலஸ்தீன மக்கள் காட்டிய நெஞ்சுரம் யூதப் படைகளை திணறடித்தது.
பாலஸ்தீனத்தின் காஸா பகுதி போராளிகளின் பூமி. அதேநேரம் இஸ்ரேல் தனது மேய்ச் சல் நிலமாகக் கருதி வேட்டைக் காடாக மாற்றியது. திடீர் திடீரென வான் தாக்குதல் நடத்தி படுகொலைகளைத் தொடர்ந்து நடத் திவந்தது.
சமீபத்தில் யூத இனவெறி அரசு நிகழ்த்திய படுகொலையில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள், பெண்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து இஸ்ரேலுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ என்ற மறுப்பாணையைக் கொண்டு செயலற்ற தாக்கியது. இரக்கமே இல்லாத யூத சக்திகளின் பாதுகாவலனான அமெரிக் காவைப் பழிக்காத நெஞ்சமே உலகில் இல்லை என்றானது.
சரி, நவம்பர் 18ல் என்னதான் நிகழ்ந்தது?
இரவானால் பாலஸ்தீன மக்கள் வெண்ணிலவையோ வெள்ளி நட்சத்திரங் களையோ பார்த்திருக்க மாட்டார்கள். பறந்துவரும் இஸ்ரேலியப் போர் விமானங்களையும், அதிலிருந்து சீறிவிழும் ஏவுகணைகளையும், எகிறி விழும் குண்டுகளையும் மட்டுமே பார்த்து வருகிறார்கள். அத்தகைய அச்சமுறு சூழ்நிலையில் வாழும் மக்களுக்கு மேலும் ஒரு பேராபத்து சூழ்ந்தது.
தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி அப்பாவிகளைப் படுகொலை செய்து வரும் இஸ்ரேலிய இனவெறிப் படை, பாலஸ்தீனத்தின வடக்கு நகரமான பைத் லஹியாவில் வெய்ல் பரோத் என்ற போராளித் தளபதியின் வீட்டை விமானம் மூலம் குண்டுவீசி தகர்க்கப் போவதாகவும் அந்தப் பகுதியில் உள்ள மக்கள் உடனே வெளியேற வேண்டும் அதுவும் அரை மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் கெடு விதித்தது.
மக்கள் வெளியேறி விடுவார்கள். அஞ்சி நடுங்கி அவர்கள் ஓடிவிடுவார் கள். அவர்கள் உயிர் அவர்களுக்குப் பெரிதுதானே? அந்தப் பகுதியே காலியாகப் போ கிறது. அதன்பின்னர் நாம் போராளி வெல் பரோத்தின் வீட்டை குண்டு வீசி தரைமட்டமாக்குவோம். அதற்கிடையில் உயிருக்குப் பயந்து வெய்ல் பரோத் சரணடைந்தால் கைது செய்து இழுத்துச் செல்வோம். இல்லையென்றால் குண்டுவீசி வீட்டோடு கொன்று விடுவோம் என்றெல்லாம் வெறியோடு காத்திருந்த இஸ்ரேலிய ராணுவத்தினருக்கு மிகப் பெரிய ஏமாற்றம் காத்திருந்தது.
வெய்ல் பரோத் வீட்டைச் சுற்றியுள்ள பகுதியிலுள்ள மக்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறுவதற்கு மாறாக அந்த அபாயப் பகுதியை நோக்கி மொய்க்கத் தொடங்கினர். 10 இருபதானது. 20 ஐம்பதானது. ஐம்பது பல நூறுகளானது. நூற்றுக்கணக்கான பாலஸ்தீன பொது மக்கள் யூத ராணுவம் குறிவைத்த பகுதியை நோக்கி குழுமத் தொடங்கினர். இது ஜனநாயக நாட்டில் நடக்கும் அறப்போராட் டம் அல்ல. அப்பாவி மக்களின் குருதி குடிக்கக் காத்திருக்கும் கொலைகார ராணுவத்தின் முன் உயிர் பயம் இன்றி கூடிய மாவீரர் கூட்டம்.
நிஸார் ரையான் என்ற ஹமாஸ் போராளியும் அந்த தீரர்களின் கூட்டத்தோடு இணைந்து கொண்டனர்.
யூத எதிர்ப்பு கோஷங்கள் வான மண்டலத்தை முட்டின. நாங்கள் வீரச்சாவுக்குத் தயார், ஆக்கிரமிப்பு சக்திகளுக்கு அடிபணிய மாட்டோம் என முழங்கினர்.
அல்ஜஸீரா தொலைக்காட்சியின் செய்தியாளர் நூல் ஒத்ஹு சம்பவ இடத்திற்கு வந்து இந்த வீர நிகழ்வுகளை உடனுக்குடன் பரப்பத் தொடங்கினார். சாவுக்கு அஞ்சாத கூட்டம் மேலும் மேலும் திரளத் தொடங்கவே, வெறுத்துப் போன யூத ராணுவம் தங்களது தாக்குதல் திட்டத்தை நிறுத்திக் கொள்வதாக அறிவித்தது.
உலக வரலாற்றில் எங்குமே காண முடியாத நிகழ்வு இது என அல்ஜஸீரா செய்தி யாளர் புகழ்ந்துரைத்தார்.
எதற்கும் அஞ்சாது துணிந்துவிட்ட மக்களின் முன் போர் விமானங்களும், கவச வாகனங்களும் ஏவுகணைகளும் உலக சரித்திரத்தில் முதன்முறையாக புறமுது கிட்டு ஓடின.

பாலஸ்தீன நாடாளுமன்றத்தை ஹமாஸ் கைப்பற்றியது!

பாலஸ்தீன நாடாளுமன்றத்தை ஹமாஸ் கைப்பற்றியது!
வரலாற்றைப் புரட்டிப் போட்ட தேர்தல் முடிவுகள்!!அபூசாலிஹ்

பாலஸ்தீன நாடாளுமன்றத் தேர்தலில் ஹமாஸ் (ஹர்க்கத்துல் முகவ்வமத்துல் இஸ்லாமியா) என்ற இஸ்லாமிய இயக்கம் பெரும்பான்மை இடங்களைக் கைப் பற்றியது. நெடுங்காலமாகவே ஜியோனிஸ சக்திகளாலும் மேற்கத்திய சார்பு ஊடகங்களாலும், போலி சமாதானவாதி களாலும் 'ஹமாஸ்' ஒரு தீவிரவாத இயக்கமாகவே சித்தரிக்கப்பட்டு வந்த நிலையில் பாலஸ்தீன மக்களின் ஏகோபித்த ஆதரவினால் ஹமாஸ் தியாக பூமியின் அதிகார பீடத்தை முதன் முறையாக அடைந்துள்ளது.
மொத்தமுள்ள 132 இடங்களில் 76 இடங்களை ஹமாஸ் கைப்பற்றி வெற்றி வாகை சூடியது. ஃபதாஹ் கட்சிக்கு 46 இடங்களே கிடைத்தன.
வெற்றிச் செய்திகள் கிடைக்கத் துவங்கியதும் ஹமாஸ் இயக்கத்தின் முக்கியத்தலைவர் ஹாலீத் மஸால் பாலஸ்தீன அரசியல் அதிகாரத்தை, எதிர்க்கட்சியான ஃபதாஹ் உடன் பகிர்ந்து கொள்ள விரும்புவதாக மிக்க பெருந்தன்மையுடன் அழைப்பு விடுத்தார்.
தாங்கள் பொறுப்புள்ள எதிர்க்கட்சி யாக பணியாற்ற விரும்புவதாகவும், தங்கள் இயக்கத்தை மீண்டும் கட்டமைப் பதில் கவனம் செலுத்தப் போவதாகவும் ஃபதாஹின் முன்னணித் தலைவர் ஸயீப் எரகாத் பதிலளித்துள்ளார்.
இதற்கிடையில் தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கவும் பாலஸ்தீன மக்கள் ஆனந்தக் கடலில் மூழ்கத் தொடங்கினர். 'பாலஸ்தீனே உன்னை வாழ்த்துகிறேன்'. 'உனக்கான விடியல் இதோ துவங்கிவிட்டது' என ஆரவார மாய் கோஷமிடுகிறார் உம்முராமி.
வீதிகளெங்கும், பேருந்துகளிலும் ட்ரக்குகளிலும் குழந்தைகள் ஹமாஸ் கொடிகளை அசைத்து கோஷமிட்டுச் சென்றனர். நிலாவுக்குச் சென்ற உணர்வை அடைந்தேன் என நெஞ்சுரு குகிறார் அபூ நஹ்லா என்ற வியாபாரி. ஹமாஸ் வெற்றி பெறும் என நினைத்தேன். ஆனால் இவ்வளவு பிரம்மாண்டமான வெற்றியை நான் எதிர்பார்க்கவில்லை என அஹ்மத் கந்தொர் தெரிவிக்கிறார்.
இது பாலஸ்தீன மக்களுக்கான வெற்றி, ஒரு போராடும் இஸ்லாமிய தேசத்தின் வெற்றி என ஸமி தெரிவிக்கிறார்.
லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளால் புரையோடிப்போன 'ஃபதாஹ்' பாலஸ்தீனத்தை ஹமாஸ் தூய்மைப்படுத்த வேண்டும் என பெருவாரியான மக்களின் எண்ணமாக உள்ளது.
ஆனால் ஃபதாஹுடன் அதி காரத்தை பகிர்ந்து கொள்வதில் ஹமாஸ் ஆர்வம் காட்டியது. அதிகாரத்தை மீண்டும் தோளில் சுமக்க தங்களுக்கு விருப்பமில்லை என ஃபதாஹ் தெரிவித்துவிட்டது. ஹமாஸின் வெற்றி குறித்து பாலஸ்தீன மக்களிடையே மகிழ்ச்சி வெள்ளம் கரை புரண்டோடுகிறது. அவ்வாறே பாலஸ்தீனத்தை நேசிக்கும் அனைத்து மக்களும் ஹமாஸின் இந்த எழுச்சியை வரவேற்றுள்ளனர்.இரக்கமுற்ற எதிரிகளின் மத்தியில் கண்ணீரையும் செந்நீரையும் சிந்தி தங்கள் தாயகத்தை காத்த அந்த இயக்கத்தின் கனவு நனவாகியுள்ளது.
சீறியெழும் ஏவுகணைகளுக்கு மத்தியில், பாய்ந்து வரும் போர் விமானங்களுக்கு நடுவில் தங்கள் உயிரை பணயம் வைத்து தாய் மண் காக்கப் போராடினார்கள். ஏராளமானோர் தங்கள் இன்னுயிரை இழந்தார்கள். தங்கள் தனிப்பெரும் தலைவர்களை இஸ்ரேலின் சதிச்செயலால் அடுத்தடுத்து (ஷேக் அஹ்மது யாஸீன், ரந்திஸி) இழந்தார்கள்.
ஆம்புலன்ஸ்கள் மீது கூட தாக்குதல் நடத்தி கொலை பாதகங்கள் புரியும் இரக்கமற்ற இஸ்ரேல் அரசு ஒருபுறம், எதிரிகளிடம் பணிவதே பாக்கியம் என்பதை கொள்கையாக வைத்திருக்கும் மஹ்மூத் அப்பாஸ் போன்றவர்கள் மறுபுறம் என்ற நெருக்கடியான சூழ்நிலையில் ஜனநாயகப் பாதையை ஒரு போராளி அமைப்பு தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால் அதற்கு அசாத்திய துணிச்சல் வேண்டும். அந்த துணிச்சல் தனக்கு உண்டு என்பதை ஹமாஸ் நிரூபித்திருக்கிறது.
ஹமாஸ் பாலஸ்தீன நாடாளுமன் றத்தை பிடித்தது என்ற செய்தி வெளி வந்தவுடன் உள்ளூர் ஊடகங்கள் முதல் உலக ஊடகங்கள் வரை செய்தியினை தெரிவித்த விதம் மிகவும் விஷமத்தனமாக இருந்தது.
'தீவிரவாத இயக்கம் தேர்தலில் வெற்றி' என்ற தொனியில் செய்திகளை வெளியிட்டன. பாலஸ்தீன தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்டு அது தேர்தலில் போட்டியிட்டு மக்கள் ஆதரவையும் பெற்றுவிட்ட நிலையில் ஹமாஸ் தீவிரவாத இயக்கம் என்று சொல்வதற்கு நீ யார்? என அவர்களின் மனசாட்சி நிச்சயம் அவர்களை கேள்வி கேட்கும்.
இதனிடையே ஹமாஸின் வெற்றி குறித்து ஆக்கிரமிப்பு சக்திகள் மற்றும் அவர்களின் ஆதரவுக் கூட்டத்தின் மிரட்சி வெளிப்படத் துவங்கியுள்ளது.
ஹமாஸ் அரசியலைத் தேர்ந்தெடுக்கப் போகிறதா இல்லையா என்பதை தெளிவாக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கண்ட லீஸா ரைஸ் தெரிவித்திருக்கிறார்.
ஹமாஸின் வெற்றி குறித்தும் பாலஸ்தீன எதிர்காலம் குறித்தும் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் பிரான்ஸின் பிரதமர் டொமினிக் டி வில்லெபின், ஐரோப்பிய யூனியன் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜேவியர் சொலானா போன்றோர் அச்சம் தெரிவித்துள்ளனர். இதில் இத்தாலியப் பிரதமர் சில்வியோ பெர்லஸ் கோனி ''இந்த செய்தி உண்மையாக இருந்தால் இது துரதிர்ஷ்ட வசமான கெட்ட செய்தி என தெரிவித்திருக்கிறார்.
இனி ஹமாஸ் இயக்கத்தினர் ஆயுதங்களை கீழே போட்டு அரசியல் நடத்துவார்கள் என தாம் நம்புவதாக ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் செயலாளர் கோஃபி அன்னான் கருத்து தெரிவித்திருக்கிறார்.
இந்த தேர்தல் முடிவினை நிச்சயம் இஸ்ரேல் அங்கீகரிக்கப்போவதில்லை. இந்த முடிவு பாலஸ்தீன மக்களுக்கோ, சமாதான திட்டத்திற்கோ எந்த பயனையும் விளைவிக்கப் போவதில்லை என்று ஆப்கானிஸ்தானில் அமெரிக்க கைப்பாவை அரசின் அதிபர் ஹமித் கர்சாய் தெரிவித்திருக்கிறார்.
பாலஸ்தீன நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் உலகிற்கு நல்ல செய்தியையே தெரிவித்திருப்பதாக தாம் கருதுவதாக இந்தோனேஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் 'ஹஸன்' விராயுதா தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்கா மிரட்டல்
ஹமாஸுடன் எந்தவித பேச்சு வார்த்தையும் நடத்தப்போவதில்லை. ஏனெனில் அவர்கள் நமது தோழமை நாடான இஸ்ரேலை அழிப்பதற்கு நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஆயுதம் ஏந்திய குழுக்களாக வலம் வருகிறார்கள். அவர்களுக்கு நாம் ஆதரவு வழங்குவது தீவிர ஆலோ சனைக்குப்பின் எடுக்க வேண்டிய ஒன்று என அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் தெரிவித்திருக்கிறார்.
ஹமாஸ் இயக்கத்தினர் வன்முறை எண்ணத்தை கைவிடா பட்சத்தில் தனது பொருளாதார உதவிகளை நிறுத்தி விடுவோம் என அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் ஈஇந செய்தி தொலைக்காட்சி நேர்காணலில் தெரிவித்தார். தனது ராணுவ அமைப்பினை ஹமாஸ் கலைக்க வேண்டும். இஸ்ரேலை அழிப்போம் என்று முழங்குவதை நிறுத்த வேண்டும் என்றும் புஷ் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
ஹமாஸ் இஸ்ரேலை அங்கீகரிக்க வேண்டும். தனது ஆயுதங்களை பாலஸ்தீன பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்க வேண்டும். அதே நேரம் இஸ்ரேலும் ஹமாஸை அங்கீகரிக்க வேண்டும் என்று துருக்கிப் பிரதமர் தய்யிப் எர்தோகன் தெரிவித்திருக்கிறார்.
பாலஸ்தீன தேர்தல் முடிவை உலகம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் ஹமாஸ் சமாதானத்தை முன்னெடுக்கும் என்பதை முழுமையாக உலகம் நம்ப வேண்டும் என்றும் மலேஷியப் பிரதமர் அப்துல்லாஹ் அஹ்மத் பதாவி தெரிவித்திருக்கிறார். இந்த தேர்தலின் முடிவுகள் பாலஸ்தீன மக்களின் அபிலாஷைகளை வெளிப்படுத்தி யுள்ளது. எனவே அதனை நாம் அலட்சியப்படுத்த முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்திருக்கிறார்.
நாங்கள் அமைதியைப் பற்றி பேசுவோம். மேற்குலத்திற்கும் எங்களுக் கும் எந்த சச்சரவும் இல்லை. நாங்கள் பகைமை பாராட்டுவது எங்கள் மண்ணை ஆக்கிரமித்ததைப் பற்றியும், எங்கள் மக்களை தாயகத்தை விட்டு விரட்டிய செயலையும், இன்றும் எம்மக்களை கொன்று குவிக்கும் செயல்களையும் நாங்கள் எதிரிகளாக பார்க்கிறோம் என காஸா பகுதிக்கான ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் ஸமிஅபூ ஜுஹ்ரி தெரிவிக்கிறார். இதற்கிடையில் காஸா விலும் பாலஸ்தீனத்தின் பிற பகுதிகளிலும் ஏராளமான ஃபதாஹ் கட்சித் தொண்டர் கள் ''தோல்விக்கு பொறுப்பேற்று அதிபர் மஹ்மூத் அப்பாஸ் பதவி விலக வேண்டும்'' என்று போராடி வருகிறார்கள். (அதிபர் மஹ்மூத் அப்பாஸ் கடந்த ஆண்டுதான் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பதவி காலம் முடிய இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ளது குறிப்பிடத் தக்கது). ஹமாஸ் இயக்கத்தினருடனும் ஃபதாஹ் இயக்கத்தினர் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்ற கட்டிடத்தின் உச்சியை நோக்கியும் அவர்கள் வெறித்தனமாக சுட்டிருக்கின்றனர்.
இந்நிலையில் ஹமாஸ் ஆயுதம் தாங்கிய தனிப்படையை பிரத்யேகமாக வைத்திருப்பது சமாதானத்திற்கு தடையாக இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் ஆயுதங்களுடன் போராடிய போதே தங்கள் தலைவர்களை எதிரிகளின் வெறித்தனத்திற்கு பலி கொடுத்த அனுபவம் அவர்களுக்கு உண்டு. எனவே அவர்கள் ஆயுதங் களை தவிர்ப்பார்களா என்பது கேள்விக் குறியே என வளைகுடாப்பகுதி அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பாலஸ்தீன தேர்தல் முடிவுகளை அமெரிக்கா அங்கீகரிக்கப் போவதில்லை. மக்களாட்சியை நோக்கி பாலஸ்தீனமும் ஹமாஸும் நடைபோடுவதாக அமெரிக்கா தடை போடக்கூடும் என அரபு லீக்கின் பொதுச் செயலாளர் அம்ரூ மூஸா அச்சம் தெரிவித்துள்ளதாக பி.பி.ஸி குறிப்பிடுகிறது.
யூதர்களின் வெறித்தனத்திற்கு இடையில் (பார்க்க பெட்டிச் செய்தி) அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனின் அவநம்பிக்கைக்கு மத்தியில் ஹமாஸ் இன்னொரு சிக்கலையும் எதிர்நோக்க வேண்டியுள்ளது.
பாலஸ்தீன அத்தாரிட்டியின் பாதுகாப்பு படையில் தற்சமயம் அப்பாஸின் ஆதரவாளர்களே பெரும் பான்மையாக உள்ளனர்.
இந்நிலையில் மேற்குலகின் அழுத்தத் திற்கு செவிசாய்த்து தனது ஆயுதப்படை பிரிவை கலைத்தால் ஹலாஸ் (அழிய) ஆக வேண்டியதுதான். எனவே, ஹமாஸ் ஆயுதப் படைப்பிரிவை கலைப்பதோ, ஆயுதங்களை கீழே போடுவதோ சாத்தியமற்ற ஒன்று என்றே அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
வேண்டுமானால் தற்போதைய பாதுகாப்புப் படையை கலைத்துவிட்டு தனது ராணுவப்பிரிவை பாதுகாப்பு படையாக அறிவிக்கக்கூடும் என்றும் யூகங்கள் புறப்பட்டிருக்கின்றன. ஹமாஸ் என்ன செய்யப்போகிறது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் நரித்தன நயவஞ்சகத்தை எப்படி எதிர் கொள்ளப் போகிறது என்பதை உலகம் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
இஸ்ரேலை தகர்ப்பதுதான் எங்கள் நோக்கமா?ஹமாஸ் தலைவர் மெஷால் பேட்டி
பாலஸ்தீனத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றுள்ள ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் மெஷால், ''இஸ்ரேலைத் தகர்ப்பது மட்டுமே எங்கள் லட்சியமல்ல, நாங்கள் எங்களது உரிமைகளை மீட்பதற்கு போராடுகிறோம்'' என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அதேநேரம், ''ஆக்ரமிப்பு பகுதிகளிலிருந்து இஸ்ரேல் முழுமையாக வெளியேறாத வரை நாங்கள் ஆயுதங்களைக் கீழே போடப் போவதில்லை'' என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஹமாஸின் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து ஐரோப்பிய யூனியனும், அமெரிக்காவும் ஐ.நா.வும் ஹமாஸ் இனி ஆயுதங்களை முற்றிலுமாகக் கைவிட வேண்டும் என்று கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாலஸ்தீனப் பிரச்சினைக்குத் தீர்வு காண உருவாக்கப்பட்ட 'ரோட்மேப்' திட்டத்தை ஹமாஸ் மறுதலித்து விட்டது. முற்றிலும் ஒருதலைப்பட்சமாக இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக ஹமாஸ் கூறியுள்ளது.
தேர்தலில் வெற்றி பெற்ற ஹமாஸ் இயக்கத்தை ஈரான் வெகுவாகப் பாராட்டியிருப்பதோடு, பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் கோரியுள்ளது.
பாலஸ்தீனத்திற்கான நிதி உதவிகள் அனைத்தையும் உலகவங்கி நிறுத்திவிடும் என்று அதன் சிறப்புத் தூதர் 'ஜேம்ஸ் வொல்ஃபென்சான்' மிரட்டியுள்ளது.படைத்தவனை மட்டுமே அஞ்சும் படைகள், ஐந்தாம் படைகளின் அச்சுறுத்தலுக்கெல்லாம் அஞ்சுமா என்ன?
அரண்டு போன இஸ்ரேல் அவசரக் கூட்டத்தைக் கூட்டியது!
பொதுத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே இருக்கும் நிலையில் இஸ்ரேல் புதிய சிக்கலை சந்தித்திருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் ஹமாஸ் வெற்றி பற்றிய செய்தி வெளியானதும் இஸ்ரேல் அரசு அவசரக் கூட்டத்தை கூட்டியது. இஸ்ரேலின் இடைக்காலப் பிரதமர் யஹுத் உல்மெர்ட் புஷ்ஷின் கருத்தையொட்டி தெரிவித்தார்.
இஸ்ரேலின் எதிர்க்கட்சியான லிக்குட் கட்சியின் தலைவர் பென்ஜமின் நேதன்யாஹு ''இஸ்ரேல் அரசுக்கு இனி நெருக்கடியான கால கட்டம்தான்'' இன்று ஒரு ஹமாஸ்தான் உருவாக்கப்பட்டுவிட்டது. ஈரானின் ஆதரவு நாடாக தலிபான் பாணியிலான அரசு உருவாக்கப்பட்டுவிட்டது என வெறுத்துப்போய் உளறிக் கொட்டினார். இஸ்ரேலின் கடிமா கட்சித்தலைவர் சிமோன் ஃபெரோஸ் கூறுகிறார்: ''பிரச்சினையே பாலஸ்தீன மக்கள் தான் அவர்கள்தான் ஹமாஸை தேர்ந்தெடுத்தார்கள். அவர்கள் தங்கள் நிலையை மாற்றப்போவதில்லை. நாங்களும் எங்கள் நிலையிலிருந்து பின் வாங்கப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
மேற்கண்ட யூத பிரமுகர்கள் மட்டுமே சற்று நாகரீக கருத்துக்களை தெரிவித்தவர்கள் இஸ்ரேலின் பழமைவாத பாராளுமன்ற உறு:பபினர் எஃபி எய்த்தாம் என்பவர் ஹமாஸின் எழுச்சி குறித்து கிட்டத்தட்ட பிதற்றியிருக்கிறார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து ஹமாஸ் எம்பிக்களையும் சுட்டுக் கொல்ல வேண்டும் அதற்காக இஸ்ரேலின் உள்நாட்டு உளவுத் துறையான 'ஷின்பாத்தை' பாலஸ்தீன பிராந்தியம் முழுவதும் ஊடுருவச் செய்ய வேண்டும் என்றும் பிதற்றியுள்ளார். இவர்கள் தான் சமாதானப் பிரியர்களாம்! பாலஸ்தீனர்கள், வன்முறை வழி வந்தவர்களாம். இது எப்படியிருக்கு?